தேர்தலுக்கு முன்னர் மைத்திரியைப் பற்றி பரப்பப்பட்ட தகவல்! பகிரங்கமாக அறிவித்த அமைச்சர்
மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்புடைய எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என பாராளுமன்றத் தேர்தலின் போது நான் கூறினேன். மைத்திரிபால சிறிசேனவைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால்தான் அவ்வாறு தெரிவித்தேன். அவர் ஒரு பாசாங்குத்தனமான மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதி என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தில் இருந்து விலகும் நாளுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், தனக்கு விலகும் யோசனை இல்லை என்றும், தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்றும் கூறினார். அவ்வாறு கூறி 24 மணி நேரத்திற்கு முன்னர் அரசிலிருந்து விலகி விட்டார்.
அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்பதால் அவருடன் நாம் அரசியல் செய்யவோ, அவரை நம்பவோ முடியாது. கடந்த பொதுத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொதுஜன பெரமுனவுடன் கைகோர்த்ததன் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.
அவர்கள் ஐ.தே.கவில் இணைந்திருந்தால், அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த நேரத்திலும் சந்தர்ப்பவாத முடிவை எடுத்தனர்.
அதனால்தான் தேர்தலுக்கு முன்னதாகவே அந்தச் செய்தியைக் கொடுத்தேன், அவரைப் பற்றி கடுமையாக விமர்சித்தேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவும், மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கத்தை விமர்சிக்க முயற்சிக்கிறார்.
சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இப்போது பொதுஜன பெரமுனவில் உள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தபோது சு.கவுக்கு உதவிய அதன் தீவிர உறுப்பினர்கள் அனைவரும் இன்று பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையைக் கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியல் கூட்டணி அமைக்க முயற்சித்தால், மக்கள் அவருடன் கைகோர்க்க மாட்டார்கள்.
அவர் அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தவும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவும் முயற்சிக்கிறார். அத்தகைய நிலையை நாங்கள் நாட விரும்பவில்லை.
அரசாங்கத்தைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லத் தேவையான உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி செய்வது போன்று எவரும் அரசாங்கத்தின் தவறுகளை விமர்சிக்கலாம் மற்றும் சுட்டிக் காட்டலாம்.
நாங்கள் எப்போதும் ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு செவிசாய்ப்பதுடன், தவறுகளை சரிசெய்யத் தயாராக இருக்கின்றோம்.
ஏறக்குறைய 5.5 மில்லியன் மக்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களித்துள்ளனர், இதனால் அரசாங்கத்தை விமர்சிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கத்தின் கூட்டணி பங்காளியாக இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிக்க யாராவது முயற்சித்தால், அவ்வாறானவர்கள் முதலில் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும். அப்போது அவர்களின் விமர்சனத்தை ஏற்க தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 9 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam