சட்ட பீடத்தின் பெண் மாணவர்கள் தொடர்பில் வெளியாகிய தகவல்
சட்ட பீடத்தில் உள்ள மாணவர்களில் 75 வீதமானவர்கள் பெண்கள் ஆனால் ஜனாதிபதி சட்டத்தரணிகளில் பெண்கள் குறைவாகவே உள்ளனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன (Eran Wickremaratne) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டமூல விவாதத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
சட்ட பீடத்தில் உள்ள மாணவர்களில் எழுபத்தைந்து வீதமான மாணவர்கள் பெண்கள் ஆனால் முழு நாட்டிலும் இரண்டு அல்லது மூன்று பெண் ஜனாதிபதி சட்டத்தரணிகள் மட்டுமே உள்ளனர் என்று எரான் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை
அவ்வாறெனில் அணுகுமுறையில் சிக்கல் இருக்கிறது. இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதிலிருந்து நாம் தப்பி ஓட முடியாது என்று விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான உடன்படிக்கை ஐக்கிய நாடுகள் சபையால் 1979இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது,
ஆனால் அது இலங்கையில் இன்னும் சட்டமாக்கப்படவில்லை என்றும் எரான் விக்ரமரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
