மின்வெட்டை கைவிட100 மில்லியன் டொலர்கள் தேவை! அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டை முற்றாகக் கைவிடுவதாயின் மாதந்தோறும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,
100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை
நீர் மின்சாரம் அல்லது அனல் மின்சாரம் எந்த வகையிலாவது இருபத்தி நான்கு மணிநேரமும் மின்சாரத்தை வழங்குவது தற்போதைக்கு முடியாத காரியம். அவ்வாறு வழங்குவதாயின் 31000 மெட்ரிக் தொன் டீசல், 63000 மெட்ரிக் தொன் எஞ்சின் ஒயில் மற்றும் 11000 மெட்ரிக் தொன் நெப்னா என்பன தேவைப்படும்.அவற்றைப் பெறுவதாயின் மாதந்தோறும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam