பொலிஸ் உத்தியோகத்தருக்கு கோவிட் தொற்று
வவுனியா பொலிஸ் நிலைய பெண் உத்தியோகத்தருக்கு கோவிட் வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஹெப்ரிக்கொல்லாவை பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்று விடுமுறையில் சென்றிருந்தார்.
தற்போது மீண்டும் கடமைக்கு திரும்பிய நிலையில் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சிலருக்கு பி.சி.ஆர்
பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.