தமிழக அரசின் அசமந்த போக்கு: இலங்கை கடற்றொழிலாளர்கள் கண்டனம்
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற இந்திய கடற்றொழிலாளர்களை, தமிழக அரசு கட்டுப்படுத்த தவறியுள்ளது என மன்னார் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.
கடல் எல்லை
இலங்கை அரசை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே, இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
குறித்த கைது நடவடிக்கைகள் ஊடாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை கட்டுப்படுத்தப்படுகின்றதா என்ற விடயம் கேள்விக்குறியாகவே உள்ளது.
நாங்கள் தொடர்ந்தும் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு தெரிவித்து வருகின்றோம். தொடர்ந்தும் எமது கடல் எல்லையை தாண்டி வராதீர்கள், என்ற விடயத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளோம்.
இந்திய அரசுக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். தமிழக அரசு சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த தவறியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |