இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்! டக்ளஸிடம் கேலித் தொனியில் சிறீதரன் கேட்ட கேள்வி
நீங்கள் கடற்றொழில் அமைச்சராக இருக்கும் வரை இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேலித் தொனியில் வினவியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நேற்று (31.05.2023) இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
பிரச்சனைக்கு தீர்வு
குறித்த விவாதத்தில் கருத்து தெரிவித்த சிறீதரன் எம்பி, நீங்கள் கடற்தொழில் அமைச்சராக இருக்கின்றீர்கள் நீண்ட காலமாக ஒரே விடயத்தினை திரும்ப திரும்ப கூறுகின்றீர்கள்.
ஆனால் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதா? அல்லது நீங்கள் அமைச்சராக இருக்கும் வரை இதற்கு தீர்வு கிடைக்காதா? என வினவிவுள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை தொடர்பில் விவாதிக்கப்பட்ட போது கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் கடற்படை அதிகாரியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
பாதுகாப்பு செலவினம்
குறிப்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் எம்பி கருத்து தெரிவிக்கையில், வரவு செலவுத் திட்டத்தில் 20 வீதமான நிதி பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கப்படுகின்றது.
ஆனால் நீங்கள் பிறிதொரு நாட்டு படகுகள் எமது நாட்டுக்குள் வருகை தருவதினை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் நீங்கள் தேசிய பாதுகாப்பினை செயற்படுத்தவில்லை.
யுத்த காலத்தில் வட பகுதியில் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக தமது மீன்பிடி செயல்பாட்டை முன்னெடுத்தார்கள்.
ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் தான் இந்த இந்திய இழுவை கடற்றொழிலாளர்களின் பிரச்சினை காணப்படுகின்றது, யுத்த காலத்தில் இங்கே எந்த ஒரு பிரச்சினையும் காணப்படவில்லை.
எனவே கடற்படையானது தேசிய பாதுகாப்பினை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் இந்திய படகுகளை கட்டுப்படுத்தும் விடயத்தில் ஏன் தயங்குகிறார்கள் என்பது தொடர்பில் எனவே நாடாளுமன்றத்தில் தெரியப்படுத்தவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்
அத்தோடு கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன், உங்களிடம் ஆளணி இல்லை என்றால் ஏன் அதனை ஏற்கனவே தெரியப்படுத்தவில்லை.
கடற்படை உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு உங்களுடைய செயற்பாடு உள்ளது.
வேறு நாட்டின் படகு உள்ளே வருகின்றது என்றால் தேசிய பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது என்பதை நாங்கள் பார்க்க முடிகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே குறித்த விடயம் தொடர்பில் அடுத்த கூட்டத்திற்கு வரும்போது இந்த இந்திய
கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையால் என்ன செய்ய முடியும் என்பது
தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri
