இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டுதலே அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றது!

Indian fishermen Government Of Sri Lanka Government Of India
By Kajinthan Jan 29, 2025 08:00 AM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்கள் தமது கடற்பரப்பை தாண்டி இலங்கை கடற்றொழிலாளர்களின் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள் நுழைவது அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக கடற்தொழில் நீர்வளத்துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 

வடமராட்சிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தொரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,"இலங்கை இறைமையுள்ள நாடு அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக கடற்றொழில் ஈடுபட்டு எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றார்கள்.

மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் குறித்து கிழக்கு ஆளுநரின் பணிப்புரை

மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் குறித்து கிழக்கு ஆளுநரின் பணிப்புரை

துப்பாக்கிச் சூடு 

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காங்கேசன் துறைக் கடற்பரப்பில் இந்தியா மீனவர்கள் அத்துமீறி வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அவர்களை கைது செய்வதற்காக கடற்படையினர் சுற்றிவளைத்து அவர்களின் படகுகுக்குள் கடற்படையினர் ஏறியுள்ளனர். இவ்வாறு ஏறிய கடற்றொழிலாளர்களை படகுடன் இழுத்துச் செல்வதற்கு இந்திய கடற்றொழிலாளர்கள் தயாரான போது கடற்படையினர் தடுத்து நிறுத்துவதற்காக துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

இந்திய அத்துமீறிய கடற்றொழில் விவகாரம் இன்று நேற்று உருவானது விடயம் அல்லை பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினை. இந்த பிரச்சனைக்கு எமது ஆட்சியில் தீர்வை காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் மக்களை தொடர்ச்சியாக கண்ணீர் விட வைக்க முடியாது.

நாங்கள் பலமுறை இந்திய கடற்றொழிலாளர்களை தயவாகக் கேட்டுள்ளோம். அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் கடற்றொழிலில் ஈடுபடாதீர்கள். எமது கடற்றொழில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் என்று.

இலங்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்பின் உத்தரவு

இலங்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்பின் உத்தரவு

இழுவைப் படகுகள் 

அண்மையில் கூட நெடுந்தீவு மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் இந்திய இழுவைப் படகுகள் அத்து மீறி உள் நுழைந்து அப்பகுதி கடற்றொழிலாளர்களின் வலைகளை நாசப்படுத்தியதுடன் அவர்களை பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களாக ஆக்குகின்றனர்.

நான் அந்த பகுதிக்கு விஜயம் சென்றபோது மக்கள் கண்ணீர் மல்க இந்திய இழுவைப் படகுகளை நிறுத்துங்கள் எங்களால் வாழ முடியாது உள்ளது என கூறுகிறார்கள்.

இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டுதலே அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றது! | Indian Fishermen Crossing Border Issue

எமது கடற்றொழிலாளர்களின் இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்கள் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை எக்காரணத்தினாலும் அனுமதிக்க முடியாது. எமது இலங்கை கடற்படை தமது கடல் எல்லையை பாதுகாப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அத்துமீறும் இந்திய கடற்றொழில் பிடிப் படகுகளை கைது செய்வது வழமையான செயற்பாடு.

கைது நடவடிக்கைகளில் ஒத்துழைக்காத படகுகளை துரத்தும் போது சில அசம்பாவிதங்கள் கடலில் ஏற்படுகின்றன. இவை கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளன.

ஆகவே, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டாது கடற்றொழிலில் ஈடுபடுவது தேவையற்ற அனர்த்தங்களை தவிக்கும்” என குறிப்பிட்டுள்ளார். 

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான வழக்கு

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான வழக்கு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US