உலக நாடுகளை எச்சரித்த இந்தியா
வெடிகுண்டுகளை தாங்கி வரும் ட்ரோன்களை தீவிரவாதிகள் புதிய ஆயுதமாக பயன்படுத்த தொடங்கி இருப்பதாகவும் இதை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு விமான தள வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் அடுத்த குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டுகள் குறைந்த வீரியம் கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த குண்டுவெடிப்பில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர்.அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதும் உடனடியாக ராணுவம் செயலில் இறங்கியது.
ராடார் மூலம் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் தொடர் தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,