இந்தியாவை அனுசரித்து செல்லும் அணுகுமுறையையே இலங்கை பின்பற்ற வேண்டும்: வீ. இராதாகிருஷ்ணன்
இந்தியாவை அனுசரித்து செல்லும் அணுகுமுறையையே இலங்கை பின்பற்ற வேண்டுமெனவும், ஆளுநர்கள் நியமனத்தைவிட மாகாண ஆட்சியை நிறுவுவதற்கான நகர்வுகள் சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
''ஆளுநர் நியமனம் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்களுடன் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை எட்டவேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் |
மக்கள் ஆட்சி
தற்போதைய நிலையில் ஆளுநர் நியமனங்களை விட, மாகாணத்தில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக மாகாணங்களுக்கான அதிகாரம் என்பது ஆளுநர் ஊடாக அல்லாமல் மக்கள் ஊடாக தெரிவு செய்யப்படும் முதல்வர் ஊடாகவே கையாளப்பட வேண்டும்.
அதிகாரங்களை முழுமையாக பகிரும் வகையில் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக வேண்டும்
13 ஆவது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்தாமல் இழுத்தடிக்கும் இலங்கை, தற்போது சீன கப்பலையும் நாட்டுக்குள் அனுமதித்துள்ளது.எது எப்படி இருந்தாலும் இந்தியாவை அனுசரித்து செல்லும் அணுகுமுறையையே இலங்கை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
எழுத்து மூலம் அறிவிப்பு
அதேவேளை, சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் அதற்கான பேச்சுகள் இன்னமும் வெற்றியளிக்கவில்லை. சர்வக்கட்சி அரசாங்கத்தில் அமைச்சில் பதவிகளை ஏற்கக்கூடாது என்பதே மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு.இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரமும் இது தொடர்பில் ஆராயப்பட்டு, உறுதியான முடிவு அறிவிக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.