ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி மனநல பாதிப்பு..! நியாயம் கேட்டு சென்ற பெற்றோர் நேர்ந்த கதி
ஆசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் உடல்நல மற்றும் மனநல பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பிலுள்ள தமிழ் மகளிர் பாடசாலையொன்றில் தரம் 5இல் கல்வி கற்கும் சில மாணவிகள், அவர்களின் வகுப்பாசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாணவி வைத்தியசாலையில் அனுமதி
இதில் ஒரு மாணவி கடுமையான உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆரம்ப சிகிச்சைகளால் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், மேலதிக மருத்துவப் பரிசோதனைகளில் மாணவிக்கு நோய் பயம் மற்றும் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர், மனநல வைத்திய நிபுணரின் பரிசோதனையிலும் அதே நிலைமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் பெற்றோர் அறிவித்ததுடன், மாணவிக்கான வகுப்பு மாற்றத்தையும் கோரியுள்ளனர்.
அதன் அடிப்படையில் மாணவி வேறு வகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், மாணவி புதிய வகுப்பில் ஒரு நாள் மட்டுமே கல்வி கற்ற நிலையில், தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் வகுப்பாசிரியர் மற்றொரு ஆசிரியருடன் முரண்பாடு கொண்டதாகவும், அதன் பின்னர் மாணவி அந்த வகுப்பில் தொடர வேண்டாம், என மாற்று ஏற்பாடுகள் செய்யலாம் என அதிபர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பொலிஸாரிடம் முறைப்பாடு
இதற்கிடையில், மாணவியின் தாயாரிடம் பாடசாலையின் உப அதிபர், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும், மாணவியை திறமையற்றவர் மற்றும் ஒழுக்கமற்றவர் என்ற தொனியில் விமர்சித்ததாகவும், மாணவியின் தந்தையையும் குறிப்பிட்டு அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தமக்கும் தமது மகளுக்கும் அசாதாரணமான சூழ்நிலை உருவாகியுள்ளதுடன், பழிவாங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்த மாணவியின் தந்தை, இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும், கல்வி அமைச்சர், சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் முறைப்பாட்டுக் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, பொலிஸார் விசாரணைக்காக அழைத்தபோது, அதிபரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் இனி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது, பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது, மாணவியின் தாயாருக்கு எந்தவித அழுத்தமும் வழங்கப்படாது என உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடு திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அதன் பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
பெற்றோர் - மாணவிக்கு எதிராக விமர்சனம் பரவல்
இந்த விவகாரம் குறித்த பாடசாலையைத் தாண்டி ஏனைய பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாகவும், பாடசாலைக்குள்ளும் வெளியிலும் மாணவியின் தாயாருக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மாணவியின் தந்தை குறித்து "சண்டைக்காரர்", "பிரச்சினைக்குரியவர்" என்ற வகையிலான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறைத்து, பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக ஆசிரியர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரிய செயல் என மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவி பாடசாலைக்குச் செல்லவே அச்சமடைந்துள்ளதாகவும், இத்தகைய சூழலில் அவர் எவ்வாறு கல்வியைத் தொடர முடியும்? அவரது பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்குவார்கள்? என்ற கேள்விகளையும் பெற்றோர் எழுப்பியுள்ளன.
பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகும் தேவேந்திரமுனை பெரஹர - குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள்
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan