கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனுவை, மேலதிக பரிசீலனைக்காக ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மனு இன்று(23.07.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மனுதாரர் கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா, தனது பதிலுரையை சமர்ப்பித்துள்ளார்.
அதன் பின்னர், மேலதிக சமர்ப்பிப்புகளுக்காக மனுவை ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று(23.07.2026) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை துப்புரவு செய்வதை தடுக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம் - காணி உரிமையாளர்கள் கவலை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மனு விசாரணை
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்தும் விசாரணைகள் சம்பந்தமாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான விசாரணைகளை இன்றைய தினத்திற்கு(23) மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது
இந்த நிலையில், இன்றைய தினம் கோட்டாபய ராஜபக்ச அவருடைய ஆதரவாளர்களுடன் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், நாமல் ராஜபக்சவின், வருகையை தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வருகை தந்துள்ளார்.




