இலங்கையை அடிமைப்படுத்தும் இந்தியாவின் எண்ணம்! அநுரவின் செயற்பாட்டை விமர்சிக்கும் விமல்
எட்கா உடன்படிக்கை மூலம் இந்தியா எதிர்வரும் காலங்களில் இலங்கையை அடிமைப்படுத்திவிடும் என்று விமல் வீரவன்ச(Wimal Weerawansa) எச்சரித்துள்ளார்.
நேற்றைய தினம் (18) மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் சொற்கேட்டு ஆடும் கைப்பாவை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) இந்திய விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கான எட்கா உடன்படிக்கை தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
லிபரல் ஜனநாயகவாதியான ரணில் விக்ரமசிங்க அவ்வாறான ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அது குறித்து ஆச்சரியப்பட நேர்ந்திருக்காது.
ஆனால் இந்திய வல்லாதிக்கம் குறித்து ஏராளமாக எச்சரித்துள்ள ரோஹண விஜேவீர உருவாக்கிய கட்சியின் தலைவர்களில் ஒருவர் அவ்வாறு செய்வது அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகின்றது.
குறித்த உடன்படிக்கை மூலம் அரசியல், கலாசாரம், எரிசக்தி மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியாவின் சொற்கேட்டு ஆடும் கைப்பாவையாக இலங்கையை மாற்றிக் கொள்வதே இந்தியாவின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
