தீவிரம் அடையும் இந்தியா - பாகிஸ்தான் போர்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிரடி நடவடிக்கை
இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ரத்து செய்துள்ளது.
எதிர்காலத்தில் சர்வதேச விமானங்களுக்கு கராச்சி மற்றும் லாகூரின் விமான நிலையங்கள் திறக்கப்பட்டவுடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பின்னர் மீண்டும் சேவையை முன்னெடுப்போம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் வாரத்திற்கு சராசரியாக 8 விமான சேவைகளை பாகிஸ்தானுக்கு மேற்கொள்கிறது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சிக்கு தலா 4 விமான சேவைகள் முன்னெடுப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பிராந்திய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கமும் விமான நிறுவனமும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகளின் பாதுகாப்பை முதன்மையான முன்னுரிமையாக கொண்டு மேலும் நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam