ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்புக்கு உதவும் இந்தியா
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இலங்கை அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, இலங்கை வெளியுறவு அமைச்சகம், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம் மூலம் இந்திய வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு, ஈரானில் இருந்து இலங்கையர்களை வெளியேற்றுவதற்கான உதவியைக் கோரியுள்ளது.
உதவும் இந்தியா
இந்த நிலையில், எல்லைகளில் சாத்தியமான இடங்களை இலங்கையர்கள் அடைய முடிந்தால், அவர்களுக்கு உதவியளிக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,110 இந்திய மாணவர்களைக் கொண்ட முதல் குழு வடக்கு ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டு, 2025, ஜூன் 17, அன்று எல்லையைத் தாண்டி ஆர்மீனியாவுக்குள் சென்றது.
பின்னர் இன்று (19 )அதிகாலையில் அங்கிருந்து இருந்து, அந்த குழு புதுடெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டது.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri