ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்புக்கு உதவும் இந்தியா
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இலங்கை அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, இலங்கை வெளியுறவு அமைச்சகம், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம் மூலம் இந்திய வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு, ஈரானில் இருந்து இலங்கையர்களை வெளியேற்றுவதற்கான உதவியைக் கோரியுள்ளது.
உதவும் இந்தியா
இந்த நிலையில், எல்லைகளில் சாத்தியமான இடங்களை இலங்கையர்கள் அடைய முடிந்தால், அவர்களுக்கு உதவியளிக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,110 இந்திய மாணவர்களைக் கொண்ட முதல் குழு வடக்கு ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டு, 2025, ஜூன் 17, அன்று எல்லையைத் தாண்டி ஆர்மீனியாவுக்குள் சென்றது.
பின்னர் இன்று (19 )அதிகாலையில் அங்கிருந்து இருந்து, அந்த குழு புதுடெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டது.
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri
சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan