மருதமுனை பகுதியில் அதிகரித்துவரும் திருட்டு சம்பவங்கள்! பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குபட்ட மருதமுனை பாண்டிருப்பு பெரிய நீலாவணை பகுதியில் அண்மைக்காலமாக திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக இரவு பகல் வேளைகளில் இத்திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதுடன் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் நோன்பு காலம் ஆகையினால் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் மற்றும் வீடுகளில் சுய பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள் விற்பனை
மேலும் அண்மையில் 18 வயது மதிக்கத்தக்க மூன்று சந்தேகநபர்கள் மருதமுனை பகுதியில் வீடு ஒன்றின் கதவினை உடைத்து ரூபா 25 ஆயிரம் பணம் பெறுமதியான கைத்தொலைபேசி என்பவற்றை திருடிய குற்றச்சாட்டில் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வசதி உள்ளவர்கள் தங்களது சொத்துக்களை பாதுகாப்பதற்காக சிசிடிவி கமராக்களை பொருத்துவதுடன் தமது பிரதேச பாதுகாப்பினை உறுதிப்படுத்த பொலிஸாருடன் இணைந்து செயற்பட முன்வருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்
மேலும் போதைப்பொருட்கள் விற்பனை, பாவனை தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே பிரதேசத்தில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது உடமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri