இலங்கையில் அதிகரிக்கும் மரணங்கள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இலங்கையில் தொற்றா நோய்களைத் தடுக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமுது பண்டாரவின் ஆலோசனையின் பிரகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கோட்டேகொடவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தொற்றா நோய்களை தடுக்க வேலைத்திட்டம்
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கலந்துகொண்ட பணிப்பாளர், இலங்கையில் தொற்றா நோய்கள் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், இலங்கையில் 80% மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை சமாளிக்க பலதரப்பு தலையீடு தேவை என்றும், அதற்கேற்ப இந்த குழு கூடி தொற்றா நோய்களை தடுப்பது தொடர்பான வேலைத்திட்டத்தை தயாரிக்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri