இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு - வெளிநாட்டு கடன் தொகைகள் அதிகரிப்பு
இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டியுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தொகைகளில் கணிசமான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின் பிரகாரம் இ;ந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் நிறைவடையும்போது இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த அரசாங்கக் கடன் தொகை 2,967,500 கோடி ரூபா வரை உயர்ந்துள்ளது.
அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் தொகை
கடந்த ஆண்டின் இறுதியில் இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டியிருந்த மொத்த கடன் தொகை 2,873,870 கோடி ரூபா என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் இந்த ஆண்டின் ஒன்பது மாத காலப்பகுதிக்குள் இலங்கை அரசாங்கத்தின் கடன் தொகை 93,630 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ளது.
அதே போன்று இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் தொகையும் இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையான ஒன்பது மாத காலப்பகுதிக்குள் 54,530 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் 1,042,904 கோடி ரூபாவாக இருந்த இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் தொகை இந்த ஆண்டின் செப்டம்பர் வரையான காலப்பகுதிக்குள் 1,097,434 கோடி ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |