பலர் முன்னிலையில் இளைஞர்களின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம்
களுத்துறை - பண்டாரகம வல்கம சுனாமி வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இரண்டு இளைஞர்களைக் கூரிய ஆயுதத்தினால், தாக்கி கைகளை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு இளைஞரின் கை துண்டாகும் வகையில் வெட்டப்பட்டுள்ளதுடன், மற்றைய நபரின் இடது கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் இரண்டு கைகளில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நபர் வீதியில் ஓடிச் சென்று வல்கம மயானத்திற்கு எதிரில் விழுந்துள்ளார்.
மற்றைய நபர், ஓடிச் சென்று பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, அண்மையில் விடுதலையான நபரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் அதனை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 17 மணி நேரம் முன்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு! இது கொலை தான்... பகீர் கிளப்பும் கைதான ஆசிரியை கிருத்திகா தந்தை News Lankasri

உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கத் துவங்கிவிட்டது: பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள விவரம் News Lankasri

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! சிரித்து கொண்டே மாணவ, மாணவிகள் வாழ்வை நாசமாக்கிய லட்சாதிபதி கைது News Lankasri
