இலங்கையின் 9 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவியேற்பு
புதிய இணைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று(25) நியமிக்கப்படட்டுள்ளனர்.
அந்த வகையில், சப்ரகமுவ ஆளுநராக சம்பா ஜானகி ராஜரத்ன பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையின் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்பாக இன்று பதவியேற்றனர்.
இலங்கையின் 9 மாகாணங்களில் சப்ரகமுவ மாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களுக்கான ஆளுநர்களே இன்று பிற்பகல் 2 மணியளவில் பதவிப் பிரமாணம் செய்தனர்.
இவ்வாறு பதவியேற்ற 8 ஆளுநர்களும் அந்தந்த மாகாணங்களில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பிரகாரம் வடக்கு ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம், மத்திய மாகாண ஆளுநராக பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சரத் அபேகோன், தென் மாகாண ஆளுநராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி பந்துல ஹரிஸ்சந்திர, ஊவா மாகாண ஆளுநராக கபில ஜயசேகர, சப்ரகமுவ மாகாண ஆளுநராக சம்பா ஜானகி ஆகியோர் உள்ளிட்ட ஆளுநர்களே இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |















Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
