மகிந்தவுக்காக உயிரை கொடுப்பேன்.! நாமலின் மக்கள் சந்திப்பில் வெடித்த சர்ச்சை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற நபர் ஒருவர், நாமல் ராஜபக்சவின் தந்தையைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது, மகிந்த ராஜபக்ச சொன்னால் தான் உயிரையும் கொடுக்கத் தயார் என்று கூறினார்.
குறித்த காணொளிகள் சமூகவலைத்தளங்களில் மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இத்தகைய தீவிர விசுவாசமான கருத்துக்கள் தற்போதைய சமூக மற்றும் அரசியல் சூழலுக்கு தேவையற்றவை என்றும், இத்தகைய உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள் சிக்கலானவை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நாட்டில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தயாராகி வருகின்றார்.
இந்த வியடங்கள் மற்றும் நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய விடயங்களை பற்றி பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...