உடனடியாக நிறுத்தப்படும் இறக்குமதி:எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு
விவசாய அமைச்சு இறக்குமதி தொடர்பில் அதிரடியான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி நாட்டிற்கான அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
07 இலட்சம் ஹெக்டேயரில் நெல்
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, பெரும்போகத்தில் சுமார் 07 இலட்சம் ஹெக்டேயரில் நெல் பயிரிடப்பட்டுள்ளதாக பத்தலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இது மொத்த பயிரிடல் நிலப்பரப்பில் 75 வீதம் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.