அநுர அரசாங்கம் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி நடவடிக்கை
தற்போது உயரடுக்கு பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் 2000 அதிகாரிகளை சாதாரண பொலிஸ் சேவையில் இணைக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும், பல வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இருந்த பின்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அமைச்சர்கள், உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை நீக்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் அமைச்சர்களுக்கான உயரடுக்கு பாதுகாப்பை வரம்பற்ற முறையில் பயன்படுத்துவதை நிறுத்த புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உயரடுக்கு பாதுகாப்பு
உயரடுக்கு பாதுகாப்பு அளிக்கும் மத தலைவர்கள், பிரதம நீதியரசர் தலைமையிலான மற்ற நீதிபதிகள் மற்றும் சட்டத்துறை தலைவர்கள், தூதுவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் ஆகியோரின் பாதுகாப்பை பழைய முறையிலேயே முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் முக்கியஸ்தர்களுக்கு உயரடுக்கு பாதுகாப்பை வழங்கவும் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri