உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சு பிறப்பித்துள்ள உத்தரவு
எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 08 மயக்கவியல் நிபுணர்களை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ஆலோசனைக்கு அமைய இந்த வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விசேட வைத்தியர்களின் வெற்றிடம்
இதன்படி தற்போது வெற்றிடமாக உள்ள விசேட வைத்தியர்களின் கடமைகள் இந்த நியமனங்கள் மூலம் எதிர்காலத்தில் வழமைக்கு மாறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை, உடுகம ஆதார வைத்தியசாலை, கம்புறுப்பிட்டி ஆதார வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை, திக் ஓயா பொது வைத்தியசாலை மற்றும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றிற்கு கடமையாற்றும் வகையில் மயக்கவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




