அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்
2024 ஆம் ஆண்டில் முதல் எட்டு மாதங்களில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்குவதற்காக அரசாங்க பெருந்தொகை பணத்தை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 6.7% அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாக அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பள செலவுகள் அதிகரிப்பிற்கான காரணம்
இதனால், கடந்த ஆண்டு (2023) முதல் எட்டு மாதங்களில் அரச ஊழியர் சம்பளம் மற்றும் கொடுப்பனவு ரூ. 61,806.6 கோடி ஆகும். இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் (2024) ரூ. 65,950.2 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த சம்பள செலவுகள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம், ஜனவரி 2024 முதல் வாழ்க்கை செலவு கொடுப்பனவாக 5000 ரூபாய் அதிகரிக்கப்பட்டமை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri