சருமத்தை வெண்மையாக்க க்ரீம்களை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை
சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை அதிகளவில் பயன்படுத்துவதால் நரம்புகளை பாதிக்கும் நோய்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஆனந்த ஜெயலால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளையாக்கும் அழகுசாதனப் பொருட்களின் வகைகளை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கு இந்நாட்டில் தற்போதுள்ள சட்டங்கள் வலுவாக இல்லை எனவும், இதனால் இந்த வர்த்தகம் மிக இலகுவாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் படி, அழகுசாதன கிரீம்கள் மற்றும் திரவங்களில் இருக்கக்கூடிய பாதரசத்தின் அளவு 01 கிலோவிற்கு 01 மி.கி. ஆகும்.
நோய் எச்சரிக்கை
இருப்பினும் முன்னெடுக்கப்பட்ட சோதனை முடிவுகளின்படி, தோல்களை வெண்மையாக்கும் கிரீம்களில் அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவு பாதரசம் இருப்பதாகவும் ஆதாரங்கள் கூறுகின்றன.
மேற்படி க்ரீம்களைப் பயன்படுத்துவதால், சருமம் மெலிவதுடன், பார்வைக் குறைபாடும் ஏற்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே உடனடியான வெள்ளையாக்கும் க்ரீம்களில் இருந்து விலகி இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இணையத்தின் ஊடாக முகம் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை கொள்வனவு செய்யும் பெண்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam