லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கு போதியளவு எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையம் மட்டுப்படுத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை இன்றைய தினம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வெளியிடுவதற்கு தங்களிடம் கையிருப்பு இல்லை என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,நாடளாவிய ரீதியில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,கொழும்பு - ஆமர் வீதியில், எரிவாயு கொள்கலன்களை ஏற்றிச்சென்ற, லிட்ரோ எரிவாயு விநியோக பாரவூர்தியை வழிமறித்த பொதுமக்கள், அதிலிருந்து பெருந்தொகையான எரிவாயு கொள்கலன்களை எடுத்துச்சென்ற சம்பவமொன்றும் பதிவாகியுள்ளது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
