முல்லைத்தீவு - கிளிநொச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
முல்லைத்தீவு - கிளிநொச்சி மக்களுக்கு அனர்த்த முகாமைப்பிரிவு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்த மண்டலம் உருவாக சாத்தியமுள்ளது. வடகிழக்கு பகுதிகளில் வரும் வெள்ளத்திற்கு தயார் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வங்காள விரிகுடா
வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்த மண்டலம் உருவாக சாத்தியமுள்ளதால், எதிர்வரும் நாட்களில் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதனால் அனைத்து மக்கள் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1. உணவு வழங்கல்:
உங்களது வீட்டில் குறைந்தது ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை கையிருப்பில் வைத்திருக்கவும்.
2. வீட்டு பாதுகாப்பு:
பலத்த மழையும் வெள்ளத்தையும் சமாளிக்க உங்கள் வீட்டை தயார் செய்யவும்.
3. முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பு:
அடையாள அட்டைகள், நில ஆவணங்கள் மற்றும் வங்கி பதிவுகள் போன்ற முக்கிய ஆவணங்களை நீர்ப்புகாத பைகளில் அல்லது பாதிரவுப் பெட்டிகளில் பாதுகாக்கவும்.
கால்நடை
4. விவசாய நிலமும் கால்நடைகளும்:
உங்களின் விவசாய நிலங்களில் நீர் வடிகால் ஏற்பாடுகளை செய்யவும். • கால்நடைகளுக்கு பாதுகாப்பான இடங்கள் ஏற்படுத்தி, அவற்றின் உணவுகளை பாதுகாக்கவும்.
5. அவசர தொடர்பு:
அவசர தொடர்பு எண்ணங்களை (உதாரணமாக, கிராம நிர்வாகி, மருத்துவ சேவை மற்றும் அனர்த் மேலாண்மை அலுவலர்கள்) கையிருப்பில் வைத்திருக்கவும்.
தனிமைப்படும் கிராமங்கள்
6. தனிமைப்படும் கிராமங்களில் தயாராக இருக்க:
உங்கள் கிராமம் தனிமைப்படும் வாய்ப்பு இருப்பின், ஒரு வாரத்திற்கு தேவையான உணவு, தண்ணீர், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்கவும்.
7. மருத்துவ உதவிகள்:
ஒரு வாரத்திற்கு தேவையான மருந்துகள் மற்றும் முதலுதவி பொருட்களை கையிருப்பில் வைத்திருக்கவும்.
8. அறிக்கை மற்றும் தகவல்தொடர்பு:
அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக உங்கள் கிராம நிர்வாகி அல்லது உள்ளாட்சி அதிகாரிகளிடம் தகவலளிக்கவும்” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
