சுரேஷ் சாலே கைதினை தொடர்ந்து அடுத்தடுத்து அம்பலமாகும் தகவல்கள்! பகிரங்கமாகும் விடயங்கள்
இலங்கையில் அடுத்தடுத்து பல பரபரப்பான விடயங்கள் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் அரசு புலனாய்வுத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமையானது பேசுபொருளாகியுள்ளது.
அதனை தொடர்ந்து இந்த கைதிற்கு பல அரசியல் முக்கியஸ்தர்கள் கருத்துக்களை தெரிவித்தும் தங்களது எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சுரேஷ் சாலேவை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலை தொடர்ந்து கோட்டாபய தரப்பினர் ஆட்சி பொறுப்பை ஏற்றனர்.
மேலும், இந்த விடயங்களில் கோட்டாபய ராஜபக்சவின் பெயரும் கோடிட்டு காட்டப்படுகின்ற நிலையில் விமல் வீரவன்சவின் கருத்துக்கள் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
120 வாக்குமூலங்களை கொண்டு சுரேஷ் சாலே ஒரு சந்தேக நபராகவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை 90 நாள்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே 90 நாள்கள் தடுப்புக்காவலில்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை - பலத்த எதிர்பார்ப்பில் பலர்..
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 11 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan