ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிடம் ஈராக் விடுத்துள்ள கோரிக்கை
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான அண்மைய பதற்ற நிலைமை குறித்து ஈராக் கவலை வெளியிட்டுள்ளது.
இந்த மோதல் உயிரிழப்புகளையும் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், பிராந்தியத்தில் மேலும் பதற்றம் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாகவும் ஈராக் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் தன்னடக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ராஜதந்திர வழிகளையும் உரையாடலையும் பயன்படுத்த வேண்டும் எனுவும் கோரப்பட்டுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் நல்ல அண்டை நாடுகளாகும் உறவை மதித்து நிலைமையை சமநிலைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், சர்வதேச சட்டங்களும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சாசனக் கொள்கைகளும் பின்பற்றப்பட்டு, மோதல்களை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை ஈராக் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri