தெஹ்ரானில் சரமாரி தாக்குதல்.. அதிரடியாக களமிறங்கிய இஸ்ரேலிய விமானப்படை
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலிய இராணுவத்தின் விமானப்படை தாக்குதல் அலையைத் தொடங்கியுள்ளது.
தெஹ்ரான் மற்றும் ஈரானின் பிற பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியுள்ளோம் என இஸ்ரேலிய விமானப்படை எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஈரான் - இஸ்ரேலுக்கு இடையிலான தாக்குதல்கள் இன்றுடன் 7ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்களில் குறைந்தது 639 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
மஹ்சா அமீனின் மரணம் தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஈரானில் நடந்த அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது விரிவான உயிரிழப்பு புள்ளிவிவரங்களை வழங்கிய குழு, இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை கொல்லப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 263 பொதுமக்களையும் 154 பாதுகாப்புப் படை வீரர்களையும் அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியது.
நாட்டில் உருவாக்கப்பட்ட ஆதாரங்களின் வலையமைப்புடன் ஒப்பிடும்போது, இறப்பு புள்ளிவிவரங்கள் ஈரானில் உள்ள உள்ளூர் அறிக்கைகளுடன் குறுக்கு சோதனை செய்யப்பட்டதாக குறித்த குழு தெரிவித்துள்ளது.
חיל-האוויר החל כעת בגל תקיפות בטהראן ובמרחבים נוספים באיראן.
— Israeli Air Force (@IAFsite) June 19, 2025
இஸ்ரேலின் தொடர்ச்சியான தீவிர தாக்குதல்களின் போது ஈரான் வழக்கமான இறப்பு எண்ணிக்கை புள்ளிவிவரங்களை வழங்கவில்லை. அதன் கடைசி புதுப்பிப்பில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 224 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,277 பேர் காயமடைந்ததாகவும் மாத்திரமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
