வெடித்துச் சிதறிய ஈரானின் இராணுவத் தளங்கள்.. இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்
புதிய இணைப்பு
தெஹ்ரானில் உள்ள 20க்கும் மேற்பட்ட இராணுவ தளங்களை இஸ்ரேலிய 60 IAF - ஜெட் விமானங்கள் தாக்கியுள்ளன.
இந்த தாக்குதலில் தெஹ்ரான் முழுவதும் உள்ள முக்கிய அணுசக்தி மற்றும் ஏவுகணை தளங்களை வெடித்துச் சிதறியுள்ளன.
குறித்த இலக்குகளில் யுரேனியம் செறிவூட்டல், மையவிலக்கு தளங்கள், ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு உற்பத்தி வசதிகள், அணு ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.
இந்த தளங்கள் ஈரானின் ஆயுதத் திட்டம் மற்றும் இஸ்ரேலிய பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு எரிபொருள் வழங்க மிக முக்கிய தளங்களாக உள்ளன.
எனவே, இஸ்ரேலிய பொதுமக்களைப் பாதுகாக்க இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து இவ்வாறான அச்சுறுத்தல்கள் மீது குறிவைக்கும் என அறிவித்துள்ளது.
⭕️ 60 IAF Jets Strike 20+ Military Targets in Tehran
— Israel Defense Forces (@IDF) June 18, 2025
The IDF struck key nuclear and missile sites across Tehran, including:
- Uranium enrichment & centrifuge sites
- Missile & air defense production facilities
- Nuclear weapons R&D centers
These sites fuel Iran’s weapons… pic.twitter.com/9p8EJ4CJkG
முதலாம் இணைப்பு
ஈரானின் புரட்சிகர காவல்படை இன்று இஸ்ரேல் மீது செஜ்ஜில் அதி-கனரக, நீண்ட தூர, இரண்டு-நிலை ஏவுகணையை ஏவியதாக அறிவித்துள்ளது.
அதேவேளை, ஈரானில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோலன் ஹைட்ஸில் மற்றொரு ட்ரோனை இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இஸ்ரேலிய இராணுவம் ட்ரோன் எங்கிருந்து ஏவப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை.
ஈரானிய தாக்குதல்
சிரியாவின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள கோலனை இஸ்ரேல், 1967ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமித்து வைத்துள்ளது.
They launch toy drones — we answer with fire from the heavens.#OpTruePromise3 pic.twitter.com/BrbUHWWpfT
— Daily Iran Military (@IRIran_Military) June 18, 2025
அது மாத்திரமன்றி முன்னதாக, தெஹ்ரான் பகுதியில் டஜனுக்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாகவும் அவை ஈரானின் இராணுவ ஆயுதத் தொழில் திட்டம் மற்றும் அதன் பாதுகாப்பு நிறுவனங்களுடன் தொடர்புடையவ எனவும் இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
நாங்கள் இயந்திரங்கள், வழிசெலுத்தல் அமைப்புகள் மற்றும் ஏவுகணை கூட்டங்களை குறிவைத்தோம். இவை இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்தப்படவிருந்த ஏவுகணைகள்” எனவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது, ஈரான், இஸ்ரேல் ஏவுகணைகளையே ஏவியது, நாங்கள் செஜ்ஜில் அதி-கனரக, நீண்ட தூர, இரண்டு-நிலை ஆயுதங்களை பாய்ச்சியுள்ளோம் என அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
