மகிந்தவின் மகன் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய ஹிருணிக்கா
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் இல்லையென சர்ச்சைக்குரிய தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
மகிந்த மீது நாமல் அன்பு இல்லாத வகையில் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு மத்தியில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்றத்தில் நாமலை கண்ட உறுப்பினர்கள், ஹிருணிக்கா ஏன் அப்படி கூறுகின்றார். உங்களை மகிந்தவின் மகன் அல்ல தந்தை மீது அன்பில்லை என்கிறாரே ஏன் என நாமலிடம் வினவியுள்ளனர். ஆம் அவர் அவ்வாறு தான் கூறியுள்ளார்.
ஹிருணிக்கா கூறுவதனை நிரூபிக்க வேண்டும் என்றால் DNA பரிசோதனை ஒன்று தான் செய்து பார்க்க வேண்டிய நிலை ஏற்படும் என நாமல் கூறியுள்ளார்.
எனினும் அவர் கூறியது மிகப்பெரிய விடயம் என்பதனால் இது தொடர்பில் ஊடகங்களிடம் கூறுமாறு நாமலிடம் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த நாமல், அவரை பெரிதாக கண்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. முன்னர் எனது தந்தையும் தாயும் தனது பெற்றோர் என கூறினார்.
எங்கள் குடும்பத்துடன் நெருங்கி செயற்பட்டார். அவர் எனது தங்கை போன்று ஒருவர் தான். இதனால் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவோம் என நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
