நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத்தொகுதியில் வெளியாட்கள்: ஏற்பட்டுள்ள சிக்கல்
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத்தொகுதியில் அதிகளவு வெளியாட்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய விசாரணையில் வெளியாகியுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், முன்னாள் எம்.பி.க்கள் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இந்த குடியிருப்புகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகள் வழங்கப்படுவதுடன் இந்த வீடுகளை பராமரிக்க அரசாங்கம் வருடாந்தம் பல கோடி ரூபாவை செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளியாட்களை அகற்றுவதில் சிக்கல்
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வீட்டுத்தொகுதியை நடத்துவதற்கான செலவும் இரட்டிப்பாகியுள்ளது.
இருப்பினும், வெளியாட்களுக்கு வீடுகள் வழங்கக்கூடாது என பல முறை அறிவித்தல் வழங்கப்பட்டும், வெளியாட்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
