அம்பாறை மாவட்ட கள விஜயம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்
அம்பாறை மாவட்டத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் கள விஜயம் மேற்கொண்டு பல்வேறு வைத்தியசாலைகளின் அபிவிருத்தி மற்றும் குறைநிறைகள் ஆராயப்பட்ட பின்னர் கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி மஹிபால தலைமையில் நேற்றைய தினம் (26.03.2024) நடைபெற்றுள்ளது.
உயர்மட்ட கலந்துரையாடல்
இதன் போது சம்மாந்துறை வைத்தியசாலை நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலை திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளின் அடிப்படைக்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
குறித்த உயர்மட்ட கலந்துரையாடலில் மேற்குறித்த வைத்தியசாலைகளின் வேலைத்திட்டங்களை எதிர்வரும் மே மாதங்களில் நிறைவு செய்வதற்கு நடைவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முடிவு எட்டப்பட்டுள்ளதுடன் ஏனைய குறைநிறைகளை முதல் கட்டமாக பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதார இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் அயராத முயற்சியின் மூலம் நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் சம்மாந்துறை பொத்துவில் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையாக கருதப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
பின்னர் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிர்மாணப்பணிகள் தாமதமடைந்ததை தொடர்ந்து, அவற்றை நிறைவு செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்த நிலையில் சம்மாந்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தினை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி செயலகம் குறித்த விடயத்தினை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது.
மேலும் குறித்த உயர் மட்டக் கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சீன நாட்டு நிறுவன திட்டமிடல் அதிகாரிகள் பிராந்திய சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

அதன் பிரகாரம் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலை நிர்மாணப் பகுதிக்கும், சம்மாந்துறை, பொத்துவில் மற்றும் ஏறாவூர் வைத்தியசாலைகளுக்கும் கள விஜயம் மேற்கொள்ள உள்ளதோடு, விரைவான தீர்வுகள் பற்றி குறித்த குழுவினருடன் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri