இலங்கையிலிருந்து வெளியேறிய கோட்டாபய! இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற இந்தியா உதவி செய்ததாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஜுலை 9 ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக் கோரி கடந்த 9ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இதனை தொடர்ந்து அன்றைய தினத்தில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டதையடுத்து, 13ஆம் திகதி பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி அயோமா ராஜபக்ச உள்ளிட்டோர் இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவு சென்றுள்ளதாக இலங்கை விமானப்படை தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கோட்டாபய இலங்கையிலிருந்து வெளியேறினாரா..! இலங்கை விமானப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல் |
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவல்
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக தெரிவிக்கப்படும் தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
as they seek to realize their aspirations for prosperity and progress through democratic means and values , established democratic institutions and constitutional framework.(2/2)
— India in Sri Lanka (@IndiainSL) July 13, 2022
இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.