நுவரெலியா வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் போராட்டம்
நுவரெலியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் தமது உரிமைகளைக் கோரி அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் முற்றத்தில் முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டம் இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நான்கு மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பணி பகிஷ்கரிப்பில் 300 இற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை பதாதைகளை ஏந்தியவாறு இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு ,மூன்று வருடங்களுக்கு மேலாக தொழில் புரியும் சுகாதார
பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும், மேலதிக சேவை
நேரத்திற்கான கொடுப்பனவை வழங்க வேண்டும், கோவிட் காலத்தில் ஏனைய அரசாங்க
ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவு மற்றும் கோவிட் பாதுகாப்பு உடை
உள்ளிட்ட சலுகைகளை தமக்கும் வழங்க வேண்டும் என மேலும் சில கோரிக்கைகளை
முன்வைத்து இவர்கள் இன்றுடன் நான்காவது முறையாகப் போராட்டத்தினை
முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.