அவசரகால மருந்து கொள்முதல் விரைவில் நிறுத்தப்படும்: சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
அவசரகால மருந்துக் கொள்வனவு நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசரகால கொள்வனவுகள் எனப்படும் மிகவும் விவாதத்திற்குரிய செயல்முறை அவசியமானது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கோவிட்-19 நெருக்கடியின் போதும், கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போதும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் கொள்முதல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு

அவசரகால கொள்முதல் பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று பல பிரிவுகள் கருதுகின்றன.
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு படிப்படியாக முடிவுக்கு வந்து வருவதாகவும், எனவே அவசரகால கொள்முதல் நடைமுறையை நிறுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு