இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளியில் இருப்பது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
களுத்துறை பொது மருத்துவமனையின் புற்றுநோயியல் நிபுணரான வைத்தியர் ஹசந்தி ஜெயலத் இதனை தெரிவித்துள்ளார்.
வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை
இந்த பாதிப்பிலிருந்து பாதுகாக்க உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவது அவசியம் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில், மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு, பகல் நேரங்களில் 'எச்சரிக்கை' மட்டத்தில் நீடிக்கக்கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam