உச்ச நீதிமன்றின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் - தினேஸ் குணவர்தன
உச்ச நீதிமன்றினால் வழங்கப்படும் தீர்ப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமேன அவைத் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாங்கள் விரும்புகின்றோமோ இல்லையோ உச்ச நீதிமன்றின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்றின் தீர்ப்பின் காரணமாக காலஞ்சென்ற காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத்முதலி போன்றவர்கள் நாடாளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் நாடாளுமன்ற ஆசனத்தை இழந்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக முறையில் நீதிமன்றின் தீர்ப்பிற்கு அனைவரும் தலை சாய்க்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றின் மரபுகளுக்கு எதிர்க்கட்சியின் இளம் தலைவர் மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஜனநாயகத்தை மதிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 10 மணி நேரம் முன்

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam
