டொலர் பிரச்சினையால் மூன்றரை இலட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டொலர் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக சுமார் மூன்றரை இலட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய வர்த்தகர் சங்கத்தின் தலைவி டானியா அபேசுந்தர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை என்பன காரணமாக மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு தொழிற்சாலைகள் மற்றும் நிர்மாணத் தொழில்களை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மூடப்பட போகும் பல்வேறு தொழிற்சாலைகள்

ஆடைக் கைத்தொழில், மின் உபகரண தயாரிப்பு, மசாலாப் பொருட்கள் உற்பத்தி மற்றும் பேக்கரி உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகள் தற்போதைக்கு மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
ஒருசில உற்பத்திகளின் மூலப்பொருட்களில் 90 வீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனினும் டொலர் பற்றாக்குறை காரணமாக குறித்த மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் தற்போதைக்கு ஏராளம் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையை அண்மித்துள்ளன.
அதன் காரணமாக சுமார் மூன்றரை இலட்சம் பேர் தொழில்களை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர் என்றும் டானியா அபேசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam