டொலர் பிரச்சினையால் மூன்றரை இலட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டொலர் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக சுமார் மூன்றரை இலட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய வர்த்தகர் சங்கத்தின் தலைவி டானியா அபேசுந்தர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை என்பன காரணமாக மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு தொழிற்சாலைகள் மற்றும் நிர்மாணத் தொழில்களை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மூடப்பட போகும் பல்வேறு தொழிற்சாலைகள்

ஆடைக் கைத்தொழில், மின் உபகரண தயாரிப்பு, மசாலாப் பொருட்கள் உற்பத்தி மற்றும் பேக்கரி உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகள் தற்போதைக்கு மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
ஒருசில உற்பத்திகளின் மூலப்பொருட்களில் 90 வீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனினும் டொலர் பற்றாக்குறை காரணமாக குறித்த மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் தற்போதைக்கு ஏராளம் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையை அண்மித்துள்ளன.
அதன் காரணமாக சுமார் மூன்றரை இலட்சம் பேர் தொழில்களை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர் என்றும் டானியா அபேசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan