புத்தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான தகவல்
வென்னப்புவ - கிம்புல்கான பிரதேசத்தில் நேற்று (7) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் வாடகைக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களை கைது செய்ய விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த பொலிஸார், வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிம்புல்கல பிரதேசத்தில் நேற்று (07) மாலை ஒரு ஆணும் பெண்ணும் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது, நீர் வடிகட்டி (Water Filter) தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இனந்தெரியாத இருவர்
வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நீர் வடிகட்டும் இயந்திரத்தை பராமரிப்பதற்காக இவர்கள் இருவரும் வந்துள்ளனர்.
மேலும், வீட்டை பழுதுபார்த்து விட்டு வெளியே செல்லும் போது முகத்தை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மாரவில பிரதேசத்தில் வசிக்கும் வீட்டின் உரிமையாளரான 65 வயதுடைய பெண்ணும், நீர் வடிகட்டி உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் 45 வயதுடைய ஒருவருமே ஆவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
