வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து திருடியவருக்கு விளக்கமறியல்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்பாட்டம் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஒரு தொகை பணம் மற்றும் பொருட்களை திருடிய நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் (07) மல்லாகம் நீதிமன்றத்தில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்பாட்டம் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஒரு தொகை பணம் மற்றும் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ளது.
பணம், பொருள் மீட்பு
இதனை தொடர்ந்து இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து களவாடப்பட்ட தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை மீட்டனர்.
இதற்கமைய, அவரை நேற்றையதினம் (07) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 15 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
