வெப்ப அலை: மாணவர்களுக்காக கல்வி அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்கள்
நாட்டில் நிலவும் வெப்ப அலையின் போது மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களின் தொகுப்பை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதிக வெப்பமான நாட்களில் வெளிப்புற விளையாட்டு மைதானங்களைத் தவிர்ப்பது மற்றும் பாடசாலை இடைவேளையின் போது வெயில் நிறைந்த பகுதிகளில் விளையாடுவதைத் தவிர்ப்பது போன்ற வழிகாட்டுதல்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மிகவும் அவசியமானால் தவிர, மதிய நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பயிற்சி அமர்வுகள்
அதற்கு பதிலாக, உட்புற விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் பிராந்திய வெப்பநிலையின் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், போதுமான அளவு சுத்தமான தண்ணீரைக் குடிப்பதன் மூலம் மாணவர்கள் நீரேற்றத்துடன் இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam