QR பதிவில் மீண்டும் சிக்கல்! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
தேசிய எரிபொருள் அனுமதி QR முறையை மீட்டெடுப்பது மற்றும் எரிபொருளைப் பெறுவதற்கான செயல்முறை குறித்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதி அமைப்பு மூலம் எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான QR குறியீடு செயல்முறை இப்போது முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்
QR குறியீடு மூலம் எரிபொருளைப் பெறுவதற்கான செயல்பாட்டில் பின்பற்ற வேண்டிய 03 படிகள் குறித்து வாகன உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

QR பதிவு செயல்முறையின் போது எழும் ஏதேனும் சிக்கல்களைத் தீர்க்க அவசர தொலைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயல்முறை தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் அல்லது கூடுதல் தகவல்களை பெற 1919 என்ற தொலைப்பேசி எண்ணில் அரசு தகவல் மையத்தை அழைப்பதன் மூலம் பெறலாம் என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் கூறுகின்றது.
எரிபொருள் நிலையங்களில் நெரிசலைக் குறைப்பதற்கும், சுமுகமான சேவையைப் பெறுவதற்கும் வாகன உரிமையாளர்கள் இந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் கேட்டுக்கொள்கின்றது.
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி! இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
