பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழப்பு
முச்சக்கர வண்டியில் மோதவிருந்த பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி அதே முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெந்தோட்டை, ரொபோல்கொட பகுதியில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற பேத்தியைப் பாட்டி அழைத்து வரும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
பெந்தோட்டை ரொபோல்கொட பகுதியைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
அவரின் பேத்தி காயமின்றி தப்பியுள்ளதோடு, முச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்ற பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
