கோறளைப்பற்று பிரிவில் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று 68 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும், பதினெட்டு (18) பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் அன்டிஜன் பரிசோதனை செய்தவர்களில் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள், பயணக்கட்டுப்பாட்டை மீறி பயணித்தவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த அன்டிஜன் பரிசோதனை நிகழ்வில்,மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.