வாழைச்சேனையில் 81 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை - எட்டு பேருக்கு தொற்று உறுதி
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 81 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
இப்பரிசோதனைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் எட்டு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவிட் தொற்றுக்குள்ளான நபர்களின் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மற்றும் இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர் ஒருவருக்குத் தொற்றுக்குள்ளான நிலையில் இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள் என 81 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த பி.சி.ஆர் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டில் கோவிட் வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையிலும்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலும் அதிகரித்து காணப்படும்
நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேசத்தினை பாதுகாத்துக் கொள்ளுமாறு
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.




