அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனுமதி! வெளியானது முழு விபரம்
இலங்கையில் அரச ஊழியர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதற்கு மட்டுமன்றி உள்நாட்டில் வேலை செய்வதற்கு சம்பளமில்லாத விடுமுறையைப் பெறவும் அனுமதி வழங்கப்படுவதாக என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் மாகாண பொது விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சம்பளம் இல்லா விடுமுறை
அரச ஊழியர்களின் பணிமூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாத வகையில் சம்பளம் இல்லாத விடுமுறை வழங்கப்படும் என அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகாண் காலத்திலும், பணியாளர்கள் அல்லாத சேவைகளில் உள்ள அரச ஊழியர்கள் மாத்திரமே இவ்வாறு விடுப்பு எடுக்க முடியும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழங்கப்படும் அனுமதி
சம்பளமின்றி விடுமுறையில் இருக்கும் அரச ஊழியர்கள், அரச பணியில் இருந்து விலகுவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்திருந்தால், அவர்கள் அரச பணியில் இருந்து விலக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
