போர் விமானங்களால் தரைமட்டமாக்கப்பட்ட கமேனியின் பதுங்கு குழி
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக கட்டப்பட்டதாக கூறப்படும் நிலத்தடி பதுங்கு குழியை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையின்படி, தெஹ்ரானின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலத்தடி பதுங்கு குழியை 50 போர் விமானங்கள் குறிவைத்ததாக அறிக்கை கூறுகின்றது.
சிறப்பு அறைகள் உடைப்பு
இந்த இடம் தெஹ்ரானில் பல தெருக்களின் கீழ் நீண்டு செல்லும் ஒரு பெரிய வளாகம் என்றும் கூட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு அறைகள் இதில் அடங்கும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.

முன்னாள் உச்ச தலைவரின் மரணத்திற்கு பிறகும் உயர் பதவியில் இருந்த ஈரானிய அரசாங்க அதிகாரிகள் இந்த வசதியை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் இஸ்ரேலிய இராணுவம் வலியுறுத்தியுள்ளது.