நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தின் முடிவு: ரோஹன ஹெட்டியாராச்சி அதிருப்தி
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான அண்மைய தீர்மானமானது, ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்புக்கு வழிவகுக்கும் என சுதந்திரமான மற்றும் நியாயமான பெப்ரல் என்ற தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாட்டின் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
குறித்த தீர்மானத்தினால் ஏற்பட்ட நிதி இழப்புக்கு யார் பொறுப்புக் கூறுவது என ஹெட்டியாராச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
அத்துடன் தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தயாரிப்பில் இலங்கை தேர்தல் ஆணையம் ஏற்கனவே கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளது.
எனவே, வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுவதால், வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், தேர்தலுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஆதாரங்களும் வீணடிக்கப்படுகின்றன.
முன்னதாக வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான தீர்மானம் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் செப்டம்பர் 20 ஆம் திகதி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
